தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரூர் இடைத்தேர்தலில் : 2 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு

அரூர்: சட்டமன்ற (தனி) தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள்  இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

By

Published : Mar 21, 2019, 5:10 PM IST

அரூர் இடைத்தேர்தல்

தமிழகத்தில் நடைபெறவுள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அரூர் (தனி) தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட குடுமியாம்பட்டி கிராமத்தை சேர்ந்த பி.இ. ஏரோநாட்டிக்கல் படித்த இளைஞர் கருத்தோவியம் (30) வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் அரூர் பகுதியை சேர்ந்த விவசாய தொழில் செய்து வரும் பார்த்திபன் (49) சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியருமான புன்னியக்கோட்டியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அரூர் இடைத்தேர்தல்

ABOUT THE AUTHOR

...view details