தமிழ்நாடு

tamil nadu

'5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகள் விலக்கு கோரப்பட்டுள்ளது'

By

Published : Sep 18, 2019, 7:53 AM IST

தருமபுரி: 5, 8ஆம் வகுப்புகளுக்கு நடக்கவுள்ள பொதுத்தேர்வில் மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு கோரப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் செயல்பட்டுவரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒரு வருடத்திற்கான தற்காலிக தொடர் அங்கீகாரம் ஆணை வழங்கும் விழா தருமபுரியில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், அன்பழகன் கலந்துகொண்டு ஆணைகளை வழங்கினர்.

அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "தமிழ்நாடு அரசின் பாடத்திட்டம் மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தைவிட சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாம், எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வில் மூன்று ஆண்டு காலம் விலக்கு கோரப்பட்டுள்ளது.

மூன்றாண்டுகளுக்கு தற்போதைய நிலையே தொடரும். மத்திய அரசு அனைவருக்கும் கல்வி என்ற முறையில் ஆணை பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு மாநிலமும் இதை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆணை பிறப்பிக்கப்படுள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைவிட தமிழ்நாடுஅரசு பாடத்திட்டம் சிறந்தது. தற்போதுள்ள பாடத்திட்டத்தின்படி 240 நாள்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டிய சூழ்நிலையில் 210 நாட்கள்தான் பள்ளி வேலை நாட்களாக உள்ளது.

மாணவர்கள் க்யூ.ஆர். குறியீட்டை பயன்படுத்தி பாடங்களை பதிவிறக்கம் செய்து படித்துக் கொள்ளலாம். இந்தியாவிலேயே க்யூ.ஆர் குறியீடு முறை தமிழ்நாட்டில்தான் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

தருமபுரி மாவட்டம் ஒரு காலத்தில் கல்வியில் பின்தங்கிய நிலையில் இருந்தது, ஆனால் தற்போது அந்தநிலை மாறி சிறந்த முறையில் கல்வி தரும் மாவட்டமாகத் திகழ்கிறது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details