தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’காவிரி உபரி நீர் திட்டத்திற்காகப் போராட்டம் நடத்த தயார்’ - அன்புமணி ராமதாஸ்

தருமபுரி: மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த எத்தனை முறை வேண்டுமானாலும் போராட்டம் நடத்த தயார் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

By

Published : Nov 3, 2019, 11:41 PM IST

அன்புமணி

தருமபுரியை அடுத்த பைசுஅள்ளியில் உள்ள திருமண மண்டபத்தில் பாமக கட்சியின் முப்படைகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், ”கடந்த இரு தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.

மேடையில் பேசும் அன்புமணி

அப்போது நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்ததை அவருக்கு நினைவூட்டினேன். மேலும் மொரப்பூர் ரயில் திட்டத்தை துரிதமாக செயல்படுத்த ரயில்வே அலுவலர்களை சந்தித்தும் அழுத்தும் கொடுத்துள்ளேன். அதேபோல் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த எத்தனை முறை வேண்டுமானாலும் போராட்டம் நடத்த தயார்” என்றார்.

இதையும் படிங்க: தேர்தலில் பாமக தோல்வி குறித்த கேள்விக்கு நழுவிய ராமதாஸ்!

ABOUT THE AUTHOR

...view details