தமிழ்நாடு

tamil nadu

மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு - 8,000 பேர் கலந்துகொண்ட மாரத்தான்!

By

Published : Sep 7, 2019, 1:31 PM IST

தருமபுரி: மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு தொடர்பாக நடைபெற்ற மாரத்தான் போட்டியில் எட்டாயிரம் பேர் கலந்துகொண்டனர்.

மாரத்தான்

தருமபுரி தனியார் பள்ளி சார்பில் ஐந்தாவது ஆண்டாக மழைநீர் சேகரிப்பு, நீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்ட மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. மாரத்தான் ஓட்டத்தை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மாரத்தான்

இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டமானது, தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து தொடங்கி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வழியாக ஐந்து கிலோமீட்டர் தூரம்வரை நடைபெற்றது. மாரத்தான் ஓட்டத்தில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் குழந்தைகள் என 8500 பேர் கலந்துகொண்டனர். போட்டியில் கலந்துகொண்டு முதல் 750 பேருக்குப் பாராட்டுச் சான்றிதழும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details