தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கோடல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சூப்பரு (30). இவர் தனக்குச் சொந்தமான வேளாண் நிலத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.
அப்போது அருகிலிருந்த காட்டுப்பகுதியிலிருந்து, காட்டுப்பன்றி வேகமாக ஓடிவந்து விவசாயியை கடித்து, நகங்களால் கீறியுள்ளது. இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட சுப்புரு, அபாயக்குரல் எழுப்பினார்.
உடனடியாக அவரது மனைவி, உறவினர்கள் ஓடிவந்து காட்டுப்பன்றியை விரட்டிவிட்டு, அவரை சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.