தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் மழையால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்: பொதுமக்கள் அவதி!

தருமபுரி: தொடர் கனமழை காரணமாக அன்னசாகரம் பகுதியிலுள்ள பல வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளதால், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

By

Published : Sep 3, 2020, 4:40 PM IST

தொடர் மழையால் வீடுகளில் புகுந்த மழை நீர்: பொதுமக்கள் அவதி!
Dharmapuri heavy rain

தருமபுரி மாவட்டம் முழுவதும் நேற்றிரவு (செப்டம்பர் 2) முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், இலக்கியம்பட்டியில் உள்ள பழமை வாய்ந்த விநாயகர் கோயிலுக்குள் மழை நீர் புகுந்து குளம் போல் காட்சியளிக்கிறது.

மேலும், தருமபுரி அன்னசாகரம் பகுதியில் தாழ்வாக உள்ள பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. நகராட்சி நிர்வாகம் பருவமழை காலங்களில் சாக்கடை கால்வாய்களை தூர்வாரி சரிசெய்தால் வீடுகளுக்குள் மழை நீர் புகுவது குறையும் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details