தருமபுரி மாவட்ட ஊரக முகமை அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம் தருமபுரி மக்களவை உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்குமார், அரசு நிர்வாகம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு முழுமையாக சென்று சேரவேண்டும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் சென்று சேர வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கட்டப்படும் தனி நபர் கழிப்பறைகள் பல்வேறு பகுதிகளில் பயன்பாடற்று காணப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று தனி நபர் கழிப்பறைகளை இணைத்து பொதுக்கழிப்பறையாக மாற்றி கட்டிக்கொடுக்கவும், அதை சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் மூலம் பராமரிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.