தமிழ்நாடு

tamil nadu

கிருஷ்ணகிரி அருகே 10 வயது சிறுவன் கொடூரமாக கொலை!

By

Published : Feb 8, 2021, 11:03 PM IST

தர்மபுரி : கிருஷ்ணகிரி அருகே 10 வயது சிறுவன் கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

krishanagri-10year-old-child-marder
krishanagri-10year-old-child-marder

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கொட்லேட்டி கிராமத்தில் அமைந்துள்ள மலேஷ்வரர் மலை அடிவாரத்தில் மர்மமான முறையில் சிறுவனின் சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் சடலம் இருப்பதை கண்டறிந்தனர்.

மேலும், சிறுவனின் வயிற்றில் மிளகாய் பொடி வைத்து, பிரம்பால் அடித்து, சூடு வைத்து கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுவனின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details