தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலைய துணை ஆய்வாளர் துரைராஜ், விஜய் சங்கர் இருவரும் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். தணிக்கையின் போது கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி நோக்கி இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் தெரிவித்ததால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி கிட்டபையனூர் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் (35), கிருஷ்ணகிரி மாவட்டம் நவாப்மேடு பாலாஜி நகரை சேர்ந்த ராஜா (30) என தெரியவந்தது.