தர்மபுரி: அரசு மருத்துவமனையிலிருந்து திருடப்பட்ட ஆண் குழந்தையை 48 மணிநேரத்தில் மீட்ட காவல் துறையினரைப் பொதுமக்கள் பாராட்டிவருகின்றனர்.
குழந்தை கடத்தல்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாச்சானூர் கிராமத்தைச் சேர்ந்த அருள்மணியின் மனைவி மாலினிக்கு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 19ஆம் தேதி இரவு ஆண் குழந்தை பிறந்தது. மறுநாள் காலை எட்டு முப்பது மணிக்கு அந்தப் பச்சிளம் குழந்தை மாயமானது.
இது குறித்து உடனடியாக நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வுசெய்தார் .
சிசிடிவி காட்சிகள் ஆய்வு
பின்பு காவல் துணைக் கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையில் 17 பேர் கொண்ட இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குழந்தையைக் கண்டுபிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டது. இதனை அடுத்து தனிப்படை காவலர்கள் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, நேதாஜி புறவழிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை ஆராய்ந்து குழந்தையைத் திருடியவர்களை அடையாளம் கண்டனர்.