தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த சிவாடி பகுதியில் தனியார் எண்ணெய் நிறுவனம் பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிலங்களைக் கையகப்படுத்திவருகின்றது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும், இயக்குநரருமான கௌதமன் சிவாடி பகுதிகளைப் பார்வையிட முடிவு செய்திருந்தார். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு அப்பகுதியில் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது. எனவே இதுகுறித்து விளக்கம் கேட்க இன்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அவர் வந்திருந்தார்.
அப்போது தொலைபேசியில் தொடர்புகொண்ட தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதமனுக்குப் பார்வையிட அனுமதி வழங்கினார்.