தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தக்க செயலிகள் உடன் கூடிய ஸ்மார்ட் போன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கலந்துகொண்டு, 210 மாற்றுத் திறனாளிகளுக்கு 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் போன்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "தர்மபுரி மாவட்டம் விவசாயத்தையே நம்பியுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விவசாயக் கல்லூரி அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.