தர்மபுரி:தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்தில் வைகுண்ட ஏகாதேசி, கிறிஸ்துமஸ், ஞாயிற்றுக்கிழமை எனத் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமல்லாது, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இன்று (டிச.27) காலை முதலே சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கியதால் அப்பகுதி முழுவதும் களைகட்டியது. தங்களது குடும்பத்தினருடன் வந்த சுற்றுலாப் பணிகள், அருவியில் குளித்தும், பரிசலில் சென்று ஐந்தருவி, சீனி அருவி ஆகியவற்றைப் பார்த்து ரசித்தும் மகிழ்ந்தனர்.