தேசிய குடும்பநல ஆய்வின்படி இந்தியாவில் நடக்கும் குழந்தைத் திருமணத்தில் 17 விழுக்காடு தமிழ்நாட்டில்தான் நடக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் சேலம், தருமபுரி, சென்னை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 1,458 குழந்தைத் திருமண வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் நடைபெறும் குழந்தைத் திருமணங்களில் இந்தியா 13ஆவது இடத்தில் உள்ளது. 43 விழுக்காடு இந்திய சிறுமிகளுக்கு 18 வயதுக்கு முன்னரே திருமணம் ஆகிவிடுகிறது. இதையடுத்து குழந்தைத் திருமணம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துவருகிறது.