கடலூர்: தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் நேற்று (மார்ச் 28) நள்ளிரவு 21 வயது இளம்பெண் தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) அரோக்கியராஜ் தலைமையில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
காதலனுடன் தனிமை: பேருந்து நிறுத்தத்தில் தனியாக நின்று கொண்டிருந்த இளம்பெண் காவல் துறையினரிடம் தனக்கு நடந்த கொடுமையை கூறியுள்ளார். அதைக் கேட்ட காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் இளம்பெண் தனது காதலனுடன் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.
பாலியல் வன்கொடுமை: அப்போது அங்கு வந்த 3 இளைஞர்கள் இருவரையும் ஒன்றாக செல்போனில் படம் பிடித்து மிரட்டியுள்ளனர். இளம்பெண்ணின் காதலனை 2 இளைஞர்கள் பிடித்துக்கொள்ள காதலன் கண் எதிரே அந்தப்பெண்ணை ஒரு இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இளம்பெண்ணுக்கு சிகிச்சை: காதலனிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு இங்கு நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என மூன்று இளைஞர்கள் மிரட்டி அனுப்பியதாக காவல் துறையினரிடம் அந்தப்பெண் கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அப்பெண்ணை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.