தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 21, 2021, 2:48 PM IST

ETV Bharat / state

ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி காலவரையின்றி மூடல்!

கடலூர்: கல்வி கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

college
college

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை அரசே ஏற்று நடத்தும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அரசுக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கட்டணம் இல்லாமல் அங்கு தனியார் சுயநிதி கல்லூரிகளை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதனைக் கண்டித்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 43 ஆவது நாளாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவக் கல்லூரி மறுதேதி குறிப்பிடப்படாமல் காலவரையின்றி மூடப்படுவதாகவும், இன்று மாலை 4 மணிக்குள் விடுதி மற்றும் கல்லூரி வளாகத்தை விட்டு மாணவர்கள் வெளியேற வேண்டும் என்றும் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள, உள் மற்றும் புற நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி காலவரையின்றி மூடல்!

மருத்துவக்கல்லூரி மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக ஏற்று, கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும், இதில் முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: முறைகேடு புகார்! - சூரப்பாவிடம் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details