மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது என்றும்; இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவில்லை எனவும் கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று பத்து நாட்களுக்கும் மேலாக அனைத்து மாநிலங்களிலும் கல்லூரி மாணவர்கள், அரசியில் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் போராட்டங்களைத் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடலூரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தினர் குடியுரிமைத் திருத்தச் சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களும் எழுப்பப்பட்டன.