தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரத்து 83ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆகவும் உள்ளது. மேலும் 1,019 பேர் கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
அதன்படி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிளாக் 10இல் 36 கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் சர்க்கரை நோயாளிகள், முதியோர்கள் ஆவார்கள். இந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் தங்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.