தமிழ்நாடு

tamil nadu

பள்ளி மாணவரின் ஷூவில் புகுந்த குட்டி நாகம்

கடலூரில் பள்ளி மாணவரின் ஷூவில் புகுந்த குட்டி நாகபாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

By

Published : Oct 5, 2022, 8:56 AM IST

Published : Oct 5, 2022, 8:56 AM IST

பள்ளி மாணவரின் ஷூவில் புகுந்த குட்டி நாகம்
பள்ளி மாணவரின் ஷூவில் புகுந்த குட்டி நாகம்

கடலூர் அருகே உள்ள ஸ்டேட் பேங்க் காலனி தெருவில் அசோகன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று (அக் 4) ஆயுத பூஜையையொட்டி வீட்டை சுத்தம் செய்யும் பணியில் அவர் ஈடுப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரது குழந்தைகளின் பள்ளி ஷூவினை சுத்தம் செய்வதற்காக எடுத்துள்ளார்.

அப்போது ஷூவினுள் குட்டி பாம்பு புகுந்திருந்திருப்பதை கண்டு அதிர்சசி அடைத்தார். அதன்பின் கடலூரில் உள்ள பாம்புபிடி வீரருக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாம்புபிடி வீரர் செல்லா, ஷூவில் இருந்த குட்டி நாக பாம்பை பத்திரமாக மீட்டு அருகாமையில் உள்ள காப்பு காட்டில் விட்டுள்ளார்.

பள்ளி மாணவரின் ஷூவில் புகுந்த குட்டி நாகம்

இதையும் படிங்க:சீர்காழி அருகே ஒரே நாளில் 6 நல்ல பாம்பு, 1 சாரைப்பாம்பு பிடிபட்டது!

ABOUT THE AUTHOR

...view details