கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஊரடங்கில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன.
இதில் தமிழ்நாட்டில் கரோனா பரவலைத் தடுக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், கரோனா தொற்றின் தாக்கம் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் சென்னை மாநகராட்சி திணறி வரும் நிலையில், அதற்கு அடுத்தபடியாக கடலூரில் கரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
வைரஸ் பரவலைத் தடுக்க கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அம்மாவட்டத்தில் இதுவரை 439 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.