தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 7, 2021, 11:58 AM IST

ETV Bharat / state

கடலில் படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் உயிரிழப்பு

கடலூர்: கடலில் படகு கவிழ்ந்து இரண்டு மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

2 மீனவர்கள் உயிரிழப்பு
2 மீனவர்கள் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சிங்கார குப்பம் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவருக்கு சொந்தமான படகில், குணசேகரன், தமிழன், வீரத்தமிழன், அப்பு ஆகிய நான்கு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க நேற்று (பிப்.6) சென்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை அவர்கள் மீன் பிடித்துவிட்டு திரும்பியபோது, எதிர்பாராதவிதமாக கடலில் படகு கவிழ்ந்தது. இதில் நான்கு மீனவர்களும் கடலில் மூழ்கினர்.

பின்னர் அப்பு, குணசேகரன் ஆகிய இரண்டு மீனவர்களும் கடலில் நீந்தி கரை வந்தனர். தமிழன், வீரத்தமிழன் ஆகியோர் மட்டும் கடலில் மாயமாகினர்.

தற்போது பழைய எம்ஜிஆர் திட்டு பகுதியில் அந்த இருவரின் சடலங்களும் கரை ஒதுங்கி உள்ளன. இதைத்தொடர்ந்து கிள்ளை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலங்களை கைப்பற்றி, உடற்கூராய்விற்காக சிதம்பரம் அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: கோவையில் ரயில் மோதி இருவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details