கோவை மாவட்டம், செங்கத்துறையில் இருந்து தேவராயாம்பாளையம் செல்லும் சாலையில் மூன்று இடங்களில் கள்ளச்சந்தையில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டுவந்தன. இதையறிந்த அப்பகுதி இளைஞர்கள் சூலூர் காவல் துறைக்கு அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த வாரம் வந்த காவலர்கள் மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை: அடித்து நொறுக்கிய இளைஞர்கள்!
கோவை: சவுக்குத்தோப்பு பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்த அரசு மதுபான பாட்டில்களை இளைஞர்கள் அடித்து நொறுக்கினர்.
மதுபாட்டில்களை உடைக்கும் இளைஞர்கள்
இந்நிலையில், சவுக்குத்தோப்பு பகுதியில் மீண்டும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி இளைஞர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனைக் கண்டு ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் மதுபாட்டில்களை அடித்து உடைத்தனர்.
இதையும் படிங்க: சட்டவிரோதமாக மது விற்றவர் கைது: 195 மதுபாட்டில்கள் பறிமுதல்!