தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 19, 2021, 12:54 PM IST

ETV Bharat / state

பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் - பெண்கள் அமைப்பு கோரிக்கை

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று,பெண்கள் பாலியல் வன்கொடுமைக் கூட்டமைப்பின் சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோரிக்கையிடப்பட்டது.

பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் : பெண்கள் பாலியல் வன்கொடுமைக் கூட்டமைப்பு கோரிக்கை
பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் : பெண்கள் பாலியல் வன்கொடுமைக் கூட்டமைப்பு கோரிக்கை

கோவை:பொள்ளாச்சி பாலியல் வழக்கு, தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,இதையடுத்து பொள்ளாச்சிப் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்து சிபிசிஐடி விசாரணைக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு தற்பொழுது சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம்

இதையடுத்து வங்கி ஊழியர் சங்கம் கட்டிடத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமை கூட்டமைப்பு சார்பில்ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசியவர்கள், ”கடந்த ஆட்சியில் தமிழ்நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கு தற்போது சிபிஐ விசாரணைக்குப் பின் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்து வழக்கு நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.வெளியில் உள்ள பிரபல புள்ளிகள் இவ்வழக்கில் சம்பந்தப்பட்டும் இன்று வரை கைது செய்யப்படவில்லை” என்பதை தெரிவித்தனர்.

வழக்குஆமை வேகத்தில் நடைபெறுகிறது

மேலும், ”இவ்வழக்கு தற்போது ஆமை வேகத்தில் நடைபெறுகிறது,பாதிக்கப்பட்ட சில பெண்கள் மட்டுமே புகார் அளித்துள்ளனர்”என்று கூறினர்.

சட்டத்தின் வாயிலாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் எனவும் இவ்வழக்கு நடைபெறும் நீதிமன்றத்தில் பொள்ளாச்சி மற்றும் கோவை சேர்ந்த வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி உண்மை குற்றவாளிகளை கைது செய்து தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்றும்,

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும்வரை சட்டப் போராட்டம் நடைபெறும்" என தெரிவித்தனர்.

இதையும் படிங்க:காவல்துறையினர் துன்புறுத்துகின்றனர்; ராஜேந்திர பாலாஜியின் சகோதரி நீதிமன்றத்தில் மனு..

ABOUT THE AUTHOR

...view details