தமிழ்நாடு

tamil nadu

ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் பணம் பறித்த பெண் கைது

By

Published : Feb 12, 2020, 4:38 PM IST

கோவை: அரசுப் பேருந்தில் மூதாட்டியிடம் 72 ஆயிரம் ரூபாய்யை பறித்த பெண்னை, பயணிகள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

money laundering
Woman arrested for money laundering at Coimbatore

கோவை கணபதி சின்னசாமி நகரைச் சேர்ந்தவர் சூரியகலா. இவர் கணபதியிலிருந்து மதுக்கரை நோக்கி அரசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் கைபையில் வைத்திருந்த 72 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை, கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண் ஒருவர் பறித்துக்கொண்டு பேருந்திலிருந்து இறங்க முயன்றார்.

அப்போது சூரியகலா கூச்சலிட்டதால், சக பயணிகள் அந்த பெண்ணை மடக்கிப் பிடித்தனர். பின்னர் வெரைட்டி ஹால் காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில், அங்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், கொள்ளையடித்த பெண் மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்த லதா என்பதும், கோவையில் நடைபெறும் கோயில் விழாக்களில் பெண்களிடம் தொடர்ச்சியாக நகை பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது.

பின்னர், லதாவை வெரைட்டி ஹால் காவல்துறையினர் கைது செய்து சூரியகலாவிடம் பறித்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க:தன் வீட்டை மகன்களிடமிருந்து மீட்டுத்தர வேண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் தாய் கண்ணீர் மல்க மனு

ABOUT THE AUTHOR

...view details