கோவை கணபதி சின்னசாமி நகரைச் சேர்ந்தவர் சூரியகலா. இவர் கணபதியிலிருந்து மதுக்கரை நோக்கி அரசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் கைபையில் வைத்திருந்த 72 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை, கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண் ஒருவர் பறித்துக்கொண்டு பேருந்திலிருந்து இறங்க முயன்றார்.
அப்போது சூரியகலா கூச்சலிட்டதால், சக பயணிகள் அந்த பெண்ணை மடக்கிப் பிடித்தனர். பின்னர் வெரைட்டி ஹால் காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில், அங்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், கொள்ளையடித்த பெண் மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்த லதா என்பதும், கோவையில் நடைபெறும் கோயில் விழாக்களில் பெண்களிடம் தொடர்ச்சியாக நகை பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது.