ஆனைமலையை அடுத்த சர்க்கார்பதி பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் காட்டிலிருந்து பட்டா நிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்திவருகின்றன.
இந்நிலையில், சர்க்கார்பதி-காண்டூர் கால்வாயை ஒட்டிய உசேன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் நேற்று இரு காட்டு யானைகள் புகுந்தன.
அங்கு காய்கறிகள் பயிரிட அமைக்கப்பட்டிருந்த பந்தலை அவை உடைத்து சேதப்படுத்தின. தோட்டத்தில் இருந்தவர்கள் காட்டு யானைகள் புகுந்தது குறித்து வனத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.