கோயம்புத்தூர்:பார்வை மாற்றுத்திறனாளிகள் மூன்று பேர் இணைந்து உருவாக்கிய 'விழிகள் இல்லாத நேரம்' பாடல் வெளியீட்டு விழா கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (மார்ச்.1) நடைபெற்றது. இந்தப் பாடலை ஜிகுனா சுந்தர் பாடியுள்ளார். சபரி சச்சிதானந்தம் இசையமைக்க, உடுமலை பார்த்திபன் பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார்.
பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடலானது லித்தி(Lithi) என்ற யூ-ட்யூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.