கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருவதாக வதந்திகள் வெளியானதையடுத்து, வால்பாறையிலிருந்து பேருந்துகள் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, கருமலை புனித வேளாங்கண்ணி ஆலயம் உள்ளிட்ட முக்கியமான இடங்கள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும், கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்திவைக்கப்பட்டதன் காரணமாக, ஏராளமான சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வெகுவாகக் குறைந்துள்ளது.