கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள சொலவம்பாளையம் பஞ்சாயத்திற்குட்பட்ட இம்மிடிபாளையம் வார்டு உறுப்பினர் பதவிக்காக பெரியார் மணி என்பவர் போட்டியிடுகிறார். இவர் மக்களிடம் ’ஓட்டுக்கு காசு, குவார்ட்டர் கொடுக்க மாட்டேன்’ என வித்தியாசமான முறையில் வாக்கு கேட்கும் விதம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இம்மிடிபாளையம் மக்களுக்காக 15 வருடங்கள் சமூக சேவை செய்துவரும், தான் கொடுக்கும் வாக்குறுதிகளை வெற்றிபெற்ற பின் நிறைவேற்றவில்லையென்றால் தன்னை வார்டு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கும் பொறுப்பை வாக்களிக்கும் மக்களிடமே கொடுத்துள்ளார். அதன்படி தனது ராஜினாமா கடிதத்தை பத்திரத்தில் எழுதி அதை மக்களிடம் கொடுத்துள்ளார்.