தமிழ்நாடு

tamil nadu

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி 6 பேர் படுகாயம்

கோவை: பொள்ளாச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஆறு பேர் படுகாயம் அடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

By

Published : Oct 1, 2019, 8:54 AM IST

Published : Oct 1, 2019, 8:54 AM IST

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து


கோவையிலிருந்து மதுரை செல்லும் அரசுப்பேருந்து பொள்ளாச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதனையடுத்து சக வாகன ஓட்டிகள் அந்த பேருந்தில் பயணம் செய்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும். ஆறு பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சாலை
இதையும் படிங்க: சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை படகில் எடுத்துச் சென்ற அவலம்...!

ABOUT THE AUTHOR

...view details