தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 18, 2020, 5:14 PM IST

ETV Bharat / state

விநாயகர் சதுர்த்தி: அனுமதி கோரி களமிறங்கிய தனி ஒருவன்!

கோவை: விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி அளிக்கக்கோரி தனியாளாக ஒருவர் மட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விழா அனுமதி கோரி ஒருவர் மட்டும் ஆர்ப்பாட்டம்!
விநாயகர் சதுர்த்தி விழா அனுமதி கோரி ஒருவர் மட்டும் ஆர்ப்பாட்டம்!

கரோனா தடுப்பு நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தி விழாவன்று பொது இடங்களில் சிலைகளை வைக்க தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனைக் கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனிடையே, விநாயகர் சதுர்த்தி அன்று சிலை வைக்க அனுமதி அளிக்கக் கோரி இந்து அமைப்பினர் கோரிக்கை மனுவையும் தமிழ்நாடு அரசிடம் முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் கோவை காந்திபுரம் சித்தி விநாயகர் கோயிலின் முன்பாக சக்தி சேனா அமைப்பின் கோவை மாவட்ட உறுப்பினர் சம்பத் திடீரென தனியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலை வைத்து வழிபட அனுமதி அளிக்குமாறு முழக்கங்களை எழுப்பினார்.

விநாயகர் சதுர்த்தி விழா அனுமதி கோரி ஒருவர் மட்டும் ஆர்ப்பாட்டம்!

திடீரென சாலையில் அவர் அமர முற்பட்டதால் காவல் துறையினர் அங்கிருந்து அவரை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். பின்னர் அவரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க:முடங்கியது விநாயகர் சிலை விற்பனை... வேதனையில் தொழிலாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details