தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 25, 2020, 4:04 PM IST

ETV Bharat / state

ரஜினிக்கு கொலை மிரட்டல் - பொங்கிய ரசிகர்கள்!

கோவை: ரஜினியின் மீது கொலை மிரட்டல் விடுத்த திராவிடர் கழகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தினர் மாவட்ட ஆணையரிடம் மனு அளித்தனர்.

pettition
pettition

துக்ளக் இதழின் ஐம்பதாம் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்திருந்தார். திராவிடர் கழகம் உள்ளிட்ட பல கட்சிகள் இதற்கு கண்டனம் தெரிவித்தது. ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பல இடங்களில் திராவிடர் கழகம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதில், திராவிடர் கழகத்தினர் ரஜினிகாந்துக்கு கொலை மிரட்டல் விடுவது போன்று பேசியதாக கூறப்படுகிறது.

கொலை மிரட்டல் விடும் அளவிற்கு திராவிடர் கழகத்தினர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என்றும் எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோவை மாவட்ட ஆணையரிடம் ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தினர் மனு அளித்தனர்.

ரஜினியின் மீது கொலை மிரட்டல் விடுத்த திராவிடர் கழகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் தெற்கு மண்டல செயற்குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி, "துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதற்கு திராவிடர் கழகத்தினர் சார்பில் பல கண்டன போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவருக்கு கொலை மிரட்டல் விடுவதாக தெரிவித்திருந்தனர். இது மிகவும் கண்டனத்திற்குரியது. அவர் துன்புறும் வகையில் திராவிடர் கழகத்தினர் பேசி இருக்கின்றனர். எனவே, பேசியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற போராட்டங்களை நாங்களும் நடத்த தயாராக இருக்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க: ‘பழங்குடியினருக்குத் தெரியாமலேயே மனித நேய வார விழா’ - சமூக ஆர்வலர் கருத்து

ABOUT THE AUTHOR

...view details