தமிழ்நாடு

tamil nadu

பொள்ளாச்சி பாலியல் வழக்கு - மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றம்!

By

Published : Feb 11, 2020, 6:05 PM IST

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவலை நீட்டித்தும்; பாலியல் வழக்கை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றியும் கோவை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு செய்திகள்  pollachi rape case current situation  பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள்  pollachi rape case accuqst
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரி ராஜன், வசந்த குமார், சதீஷ், மணிவண்ணன் ஆகியோர் இன்று சேலத்தில் இருந்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கானது கடந்த முறை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றிய நிலையில், அவர்களை மேலும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி சக்திவேல் இன்று உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றியும் முதன்மை நீதிமன்ற நீதிபதி சக்திவேல் ஆணை பிறப்பித்தார்.

இதன்பின்பு மீண்டும் அவர்கள் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

இதையும் படிங்க: மாணவிகளிடம் அத்துமீறிய ஹெட்மாஸ்டர்: பெற்றோர் சாலை மறியல்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details