கேரளா எல்லைப் பகுதிகளில் இருந்து கோயம்புத்தூரில் உள்ள நவக்கரை, மதுக்கரை ஆகிய இடங்களுக்கு லாரிகள் மூலம் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், மருத்துவக் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று (மார்ச். 08) இரவு கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்த மதுக்கரை மக்கள், காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.