கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கினால் பல்வேறு தொழிலாளர்களும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இந்தச்சூழ்நிலையில், வெளிமாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்து தமிழ்நாட்டிற்கு வந்து வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரணமாக 10ஆயிரம் ரூபாய், அரசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கவேண்டும் என என மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட் கட்சியினர் கோவை லாலி ரோடு பகுதியில் போராட்டம் நடத்தி அந்த வீடீயோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர்.
ஊடங்கு அமலில் உள்ள நிலையில், போராட்டத்தை நடத்தியதற்காக அக்கட்சியின் கோவை மாநகர செயலாளர் வேல்முருகன் கைதுசெய்யப்பட்டார். அவர் மீது ஊரடங்கு உத்தரவை மீறுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அரசு உத்தரவுக்கு கீழ்படியாமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது.