கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பணியாற்றிவரும் சுகாதாரத் துறையினர், காவல் துறையினர், துப்புரவுப் பணியாளர்ளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் வருவாய்த் துறை சார்பில் ஓவியர்கள் பிரமாண்ட ஓவியம் வரைந்துள்ளனர்.
பின்னர், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மகேந்திரன் கரோனா வைரஸ் அச்சுறுதத்தல் குறித்தும், சமூக விலகல் குறித்த அவசியத்தையும் விளக்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.