தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 13, 2020, 10:44 AM IST

ETV Bharat / state

கரோனா வாரியர்ஸை கெளரவித்து பொள்ளாச்சியில் விழிப்புணர்வு!

கோயம்புத்தூர்: கரோனா வைரசைக் கட்டுப்படுத்த முயன்றுவரும் பணியாளர்களை கெளரவிக்கும் விதமாகவும், கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

corona virus awareness program held in pollachi
corona virus awareness program held in pollachi

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பணியாற்றிவரும் சுகாதாரத் துறையினர், காவல் துறையினர், துப்புரவுப் பணியாளர்ளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் வருவாய்த் துறை சார்பில் ஓவியர்கள் பிரமாண்ட ஓவியம் வரைந்துள்ளனர்.

பொள்ளாச்சியில் நடைபெற்ற கரோனா விழிப்புணர்வு

பின்னர், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மகேந்திரன் கரோனா வைரஸ் அச்சுறுதத்தல் குறித்தும், சமூக விலகல் குறித்த அவசியத்தையும் விளக்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பின்னர், ஓவிய அமைப்பினர் சார்பில் வரையப்பட்ட கரோனா விழிப்புணர்வு ஓவியத்தினை சார் ஆட்சியர் பார்வையிட்டார்.

இதையும் படிங்க:கரோனாவை விரட்டியடிக்கும் காவல் துறை - ஓவியம் சொல்லும் விழிப்புணர்வு

ABOUT THE AUTHOR

...view details