கோயம்புத்தூர்:குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவ பிரசாத். இவர் சிவானந்தா காலனி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டிற்கு முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்க சென்றுள்ளார்.
காலையில் வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அருகில் உள்ள வீட்டின் சிசிடிவி காட்சிகளை பார்த்துள்ளார். அதில், டியுக் பைக்கில் வந்த மூன்று மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருடி சென்றது தெரியவந்தது.