தமிழ்நாடு

tamil nadu

டியுக்கில் வந்து பல்சர் பைக்கை திருடி சென்ற இளைஞர்கள்

By

Published : Dec 9, 2022, 6:42 AM IST

கோவையில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை இளைஞர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

பைக்கை திருடி சென்ற இளைஞர்கள்
பைக்கை திருடி சென்ற இளைஞர்கள்

கோயம்புத்தூர்:குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவ பிரசாத். இவர் சிவானந்தா காலனி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டிற்கு முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்க சென்றுள்ளார்.

காலையில் வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அருகில் உள்ள வீட்டின் சிசிடிவி காட்சிகளை பார்த்துள்ளார். அதில், டியுக் பைக்கில் வந்த மூன்று மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருடி சென்றது தெரியவந்தது.

பைக்கை திருடி சென்ற இளைஞர்கள்

இது குறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவியில் பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டு மர்ம நபர்கள் மூன்று பேரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:பெண் போல் நடித்து திருமண மோசடி.. ரூ.21 லட்சத்தை ஆன்லைன் கேமில் இழந்த நபர்!

ABOUT THE AUTHOR

...view details