40 ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் நடைபெற்றுவருகிறது. அத்திவரதரை தரிசிக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான பக்தர்கள் வரதராஜர் கோயிலில் குவிந்தனர்.
பொள்ளாச்சியில் எழுந்தருளியுள்ள அத்தி வரதர்!
பொள்ளாச்சி: கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் காஞ்சிபுரம் அத்திவரதர் போல் வடிவமைக்கப்பட்ட சிலையை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அத்தி வரதர்
இந்நிலையில், பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அத்தி வரதரை போல் வடிவமைக்கப்பட்ட சிலை பொதுமக்கள் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலிருந்து ஆயிரக்கனக்கான மக்கள் இதனை தரிசனம் செய்கின்றனர்.
காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசனம் செய்ய முடியாதவர்கள், தற்போது பொள்ளாச்சியில் உள்ள அத்திவரதரை தரிசித்து மகிழ்வதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.