தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அம்பேத்கர் பிறந்தநாள்: கோவை ஆட்சியர் மலர்த்தூவி மரியாதை

கோயம்புத்தூர்: அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது புகைப்படத்திற்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

By

Published : Apr 14, 2021, 12:01 PM IST

அம்பேத்கர் பிறந்தநாள்: கோவை மாவட்ட ஆட்சியர் மலர் தூவி மரியாதை
அம்பேத்கர் பிறந்தநாள்: கோவை மாவட்ட ஆட்சியர் மலர் தூவி மரியாதை

சட்ட மாமேதை என்று போற்றப்படும் அண்ணல் அம்பேத்கரின் 130ஆவது பிறந்தநாளையொட்டி பல்வேறு இடங்களில் பல்வேறு தரப்பினர் அவரது உருவச் சிலைக்கும் புகைப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கர் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் வருவாய்த் துறை அலுவலர் ராமதுரை, முருகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலரும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க:சனாதன இந்தியாவை ஒழித்து சமத்துவ இந்தியா அமைய பாடுபட வேண்டும் - திருமாவளவன்

ABOUT THE AUTHOR

...view details