தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 19, 2020, 6:44 PM IST

ETV Bharat / state

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்

கோயம்புத்தூர்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதித்தமிழர் பேரவையினர் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்
ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யும் வகையில் மசோதாவை நிறைவேற்ற உள்ள மத்திய அரசை கண்டித்தும் பொள்ளாச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆதித்தமிழர் பேரவையின் தலைமை செயற்குழு உறுப்பினர் கோபால் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில், ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் தாமரை வீரன், குப்புசாமி மாசாணி, தென்னை தொழிலாளர் சங்க தலைவர் கருப்புசாமி, வால்பாறை முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details