தமிழ்நாடு

tamil nadu

பெண் உயிரிழப்புக்கு விபத்து காரணம்

கோவை: சாலையில் பெண் ஒருவர் உயிரிழந்து கிடந்ததற்கு விபத்துதான் காரணம் என தெரியவந்துள்ளது.

By

Published : Sep 12, 2021, 3:00 PM IST

Published : Sep 12, 2021, 3:00 PM IST

accident
accident

கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் கடந்த ஆறாம் தேதி (செப் 6) பெண் ஒருவரின் உடல் சாலையில் மீட்கப்பட்டது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக பீளமேடு காவல் துறையினர் இரு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதில் அந்தப் பெண் கோவை கரியாம்பாளையத்தைச் சேர்ந்த லட்சுமி(80) என்பதும், அவர் சின்னியம்பாளையம் பகுதியிலுள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரி கேன்டீனில் வேலை செய்ததும் தெரிந்தது.

மேலும் சம்வபவத்தன்று இரவு வேலை முடித்த லட்சுமி சாலையை கடக்க முயன்றபோது விபத்தில் சிக்கியது உறுதியானது. அதேசமயம் பைசல் என்பவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details