சென்னை குரோம்பேட்டை அம்பாள் நகர் 1ஆவது தெருவில் வாடகை வீட்டில் வசித்துவருபவர் திருநாவுக்கரசு, இவருடைய மகன் நவநீதகிருஷ்ணன் (32) எம்.எஸ்.சி கணினி அறிவியல் படித்த பட்டதாரி ஆவார். நவநீதகிருஷ்ணனுக்கு நீண்ட மாதங்களாகவே வேலை கிடைக்காமல் இருந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வேலை கேட்டு சென்றுள்ளார். அங்கு அவருக்கு வேலை கிடைக்கவில்லை, இதனால் நவநீதகிருஷ்ணன் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவு படுக்கையறைக்கு சென்ற அவர் இன்று காலை வெகு நேரமாகியும் கதவை திறக்காததால் அவரின் தந்தை கதவை திறந்து பார்த்தபோது, நவநீதகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதைக் கண்டு அவரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.