சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், 'சென்னை பாரிஸில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கச்சாலீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு சொந்தமான தெப்பக்குளத்தில் நடத்தப்படும் திருவிழாவில் அருள்மிகு காச்சாலீஸ்வரர், அருள்மிகு காளியம்மன், அருள்மிகு முத்துகுமாரசுவாமி, அருள்மிகு சிவ சண்முக விநாயகர், அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய தெய்வங்கள் 5 நாள் பங்கேற்கின்றன.
ஆலயத்தை சரியாக பராமரிக்காததால், குளத்தின் தண்ணீர் வரத்து தடைபட்டு கடந்த 9 ஆண்டுகளாக தெப்பத்திருவிழா நடத்தப்படாமல் உள்ளது. மேலும், குளத்தை சுற்றியுள்ள சுவர்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால், அருகில் வசிக்கும் பொதுமக்களின் உயிருக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.