தமிழ்நாடு

tamil nadu

ஊரடங்கு மீறல்: தமிழ்நாடு முழுவதும் 3,65,747 வாகனங்கள் பறிமுதல்!

By

Published : Apr 30, 2020, 1:42 PM IST

ஊரடங்கை மீறியதாக தமிழ்நாடு முழுவதும் 37 நாட்களில் 3,65,747 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Vehicles seized across Tamil Nadu
Vehicles seized across Tamil Nadu

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

தடை உத்தரவை மீறும் இளைஞர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த 37 நாள்களில் தமிழ்நாடு காவல்துறை 3,45,324 வழக்குகளை பதிவு செய்து, தடையை மீறியதாக 3,46,071 பேரை கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளது. 3,65,747 வாகனங்கள் பறிமுதல் செய்து, ரூ. 3,54,25,999 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் ரூ. 3 கோடிக்கு மேல் அபராதம் வசூல்!

ABOUT THE AUTHOR

...view details