சென்னை:திருச்சி காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் என்கிற அசோக் (29). இவர் மீது திருச்சி மாவட்ட காவல் நிலையங்களில் திருட்டு, ஆள் கடத்தல், கொள்ளை, வெடிகுண்டு வீசுதல் போன்ற ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை, ஆள் கடத்தல் என இரண்டு வழக்குகள், தேனி மாவட்டத்தில் கொள்ளை தொடர்பான வழக்கு, சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் வழக்கு, திண்டுக்கல் மாவட்ட காவல் நிலையங்களில் ஆள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் சென்னை பள்ளிக்கரணை பகுதியில் கார்களைப் பெட்ரோல் ஊற்றி எரித்து, அப்பகுதி மக்களை கத்தியைக் காட்டி மிரட்டிய வழக்கில் காவல் துறையினர் பிரவீனை கைதுசெய்து ஏழு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.