தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 3, 2020, 1:01 PM IST

ETV Bharat / state

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தினகரன் வாழ்த்து

சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினகரன்
தினகரன்

தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. இதில், தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் ட்விட்டர் பதிவு

அவர் ட்விட்டரில் கூறியிருந்ததாவது, “12ஆம் வகுப்பு (ப்ளஸ் 2) பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவச் செல்வங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். உங்கள் வாழ்வின் முக்கியமான தேர்வைப் பதற்றமில்லாமல், மிகுந்த கவனத்தோடும், நம்பிக்கையோடும் எழுதுங்கள். தங்களின் இலக்குகளை நீங்கள் நினைத்ததுப்போலவே அடைந்திட வாழ்த்தி மகிழ்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பொதுத்தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details