தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 26, 2020, 8:58 PM IST

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

Top 10 news @ 9 pm
Top 10 news @ 9 pm

  • எத்தனை நாள் இந்தியாவை விலக்கி வைத்திருப்பீர்கள்? - ஐநாவிடம் கேள்வி எழுப்பும் மோடி!

முடிவெடுக்கும் சக்தி வாய்ந்த அமைப்புகளிலிருந்து இந்தியாவை எத்தனை நாள்தான் ஐநா விலக்கி வைத்திருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

  • பிகார் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு - முதலமைச்சரை சந்தித்த முன்னாள் டிஜிபி பாண்டே!

பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் யாதவை அம்மாநில முன்னாள் காவல்துறைத் தலைவர் குப்தேஷ்வர் பாண்டே மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துள்ளார்.

  • மாமனாரை கொலை செய்த மருமகன் கைது!

திருவண்ணாமலையில் குடும்ப விவகாரம் காரணமாக மாமனாரை கொலை செய்த மருமகனை காவல் துறையினர் கைது செய்தனர்.

  • தாயைப் பராமரிக்கத் தவறிய மகன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

பெற்ற தாயை ஏமாற்றி சொத்துகளை எழுதிவாங்கிய மகனுக்கு எதிரான புகார் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென காஞ்சிபுரம் ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • புதுப்பொலிவுடன் திறக்கப்பட உள்ள கோயம்பேடு சந்தை!

கரோனா தொற்றால் மூடப்பட்ட கோயம்பேடு சந்தை தற்போது புதுப்பொலிவு பெற்று நாளை மறுநாள் (செப். 28) மொத்த வியாபாரத்திற்காகத் திறக்கப்படவுள்ளது.

  • கீச் கீச் சத்தம்தான் எங்களுக்கு அலாரம் - 6 வருடங்களாக கிளிகளுக்கு உணவளித்துவரும் தம்பதி...!

ஆறு வருடங்களாக 200க்கும் மேற்பட்ட கிளிகளுக்கு உணவு அளித்து வரும் தம்பதி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

  • குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்!

குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை கணவர் நெரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • 'தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தியா எழுச்சிபெறும்!'

தேசிய கல்விக்கொள்கை மூலம் நாட்டின் இளைய தலைமுறை வலுபெற்று தேசம் எழுச்சிபெறும் என மத்திய கல்வி அமைச்சர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

  • பிக்பாஸ் நிகழ்ச்சியில் எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்திய நாகார்ஜுனா!

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று (செப். 26) எஸ்.பி.பி.க்கு நடிகர் நாகார்ஜுனா அஞ்சலி செலுத்தினார்.

  • ஐபிஎல் 2020: டூ பிளேசிஸுக்கு ஆரஞ்சு; ரபாடாவுக்கு ஊதா!

இந்த சீசன் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை சென்னை அணியின் டூ பிளேசிஸும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களுக்கான ஊதா நிற தொப்பியை டெல்லி அணியின் ரபாடாவும் கைப்பற்றினர்.

ABOUT THE AUTHOR

...view details