தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @7PM

ஈடிவி பாரத்தின் மாலை 7 மணி செய்திச் சுருக்கம்.

By

Published : May 8, 2021, 7:34 PM IST

Top 10 news @7PM
7 மணி செய்திச் சுருக்கம்

தேவையானதை மட்டும் வாங்குங்க: இன்றும், நாளையும் போனால் மறுநாள் அவ்வளவுதான்!

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 10ஆம் தேதி மாநிலம் முழுவதிலும் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கிற்கு அமல்படுத்தப்படவுள்ளது. அதனால், முன்பிருந்த வார கடைசி நாட்களில் வரும் முழு ஊரடங்கை (மே 8, 9ஆம் தேதிகள் மட்டும்) அரசு ரத்து செய்துள்ளது.

வடமாவட்டங்களில் பலத்தை நிரூபித்த திமுக... சாத்தியமானது எப்படி?

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மூன்றில் இரண்டு பங்கு இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றி அபார வெற்றியைப் பதித்துள்ளது. குறிப்பாக, வட மாநிலங்களில் பல இடங்களில் வெற்றிப்பெற்று தனது பலத்தை நிருபித்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகங்கள் செயல்பட அனுமதி - ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு

சென்னை: ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டிருப்பதை வரவேற்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பூசி 2ஆவது டோஸ் செலுத்த முன்னுரிமை - மாநிலங்களை வலியுறுத்தும் மத்திய அரசு!

அனைத்து மாநிலங்களும் பயனாளிகள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசியின் 2ஆவது டோஸை செலுத்த முக்கியத்துவம் அளிக்குமாறு சுகாதாரஅமைச்சக கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா அறிவுறுத்தியுள்ளார்.

அறிவியல் காதல்...25 உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரரான ஒடிசா வாசி!

பல ஆச்சரியமூட்டும் கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரான மிஹிர், 25 உலக சாதனைகளைப் படைத்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

நிலமற்ற மக்கள் மனதில் நிலையாகக் குடி கொண்ட மனிதர் - யார் இந்த உமாநாத்?

முதலமைச்சரின் தனிச்செயலாளர் பதவி வகிக்கும் உமாநாத் ஐஏஎஸ் பெயரில் ஒரு கிராமப்பகுதி உள்ளதை அறிவீர்களா. ஆம், உதவி செய்த மாவட்ட ஆட்சியரின் பெயரை ஊருக்கு வைத்து நன்றிக் கடன் செலுத்தி வரும் கிராம மக்கள் குறித்த சிறப்பு செய்தி தொகுப்பினை காணலாம்.

கேகேஆரை விடாமல் துரத்தும் கரோனா!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த பிரஷித் கிருஷ்ணாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் செலுத்தும் கருவிகள் வழங்கிய அறக்கட்டளை!

மயிலாடுதுறை: சேவாபாரதி மற்றும் கலங்கரை சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் அரசு மருத்துவமனைக்கு வழங்கிய இரண்டு ஆக்ஸிஜன் செலுத்தும் கருவிகளை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார்.

ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடக்கம்!

திருநெல்வேலி: அதிக நெரிசல் மிகுந்த நகர் பகுதிகளில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக, கரோனா தடுப்பு பணி கண்காணிப்பு அலுவலர் அபூர்வா தெரிவித்துள்ளார்.

கோவையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடக்கம்!

கோயம்புத்தூர்: கரோனா பாதித்தவர்களுக்கு ஆபத்தான நிலையில் செலுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details