தமிழ்நாடு

tamil nadu

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்.

By

Published : Jan 30, 2021, 7:34 AM IST

Published : Jan 30, 2021, 7:34 AM IST

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்
ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்

1 எழுவர் விடுதலை, தமிழர்களின் உணர்வு சார்ந்தது - அமைச்சர் ஜெயகுமார்!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேர் விடுதலையை வலியுறுத்தி ஆளுநரைச் சந்தித்து முதலமைச்சர் கே. பழனிசாமி கடிதம் அளித்தார். அதுகுறித்து மீன்வளத் துறை அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

2 காளான் பிரியாணியை ருசித்துச் சாப்பிட்ட ராகுல்: தமிழ்நாடு யூ-ட்யூப் சேனல் காணொலி வைரல்

Village cooking channel என்ற யூ-ட்யூப் சேனலை நடத்திவருபவர்களுடன் இணைந்து ராகுல் காந்தி காளான் பிரியாணியை சமைத்துச் சாப்பிட்ட காணொலி தற்போது வைரலாகிவருகிறது.

3 போர்பந்தருக்குப் பிறகு கட்டப்பட்ட காந்தி கோயில்;அன்றாடம் பூஜித்துவரும் மக்கள்

கர்நாடகாவில் உள்ள இக்கிராம மக்கள் மகாத்மா காந்தியின் கொள்கைகளான அகிம்சை, அமைதி போன்றவற்றை பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர். அதற்கு காரணமாக இருப்பது இங்குள்ள காந்தி கோயில். அன்றாடம் இக்கோயிலுக்கு இப்பகுதி மக்கள் பூஜை செய்து பிற மக்களுக்கு எடுத்துக்காட்டான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

4 சேர்த்தால் உதயம்; தவிர்த்தால் அஸ்தமனம் - திமுகவை மிரட்டும் அழகிரி பிறந்தநாள் சுவரொட்டிகள்

சென்னை: அழகிரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு 'சேர்த்தால் உதயம்; தவிர்த்தால் அஸ்தமனம்' எனச் சுவரொட்டிகள் மதுரை நகர் முழுவதும் ஒட்டப்பட்டு பரபரப்பை கிளப்பியுள்ளன

5 அண்ணாமலை பல்கலை. மாணவர்களின் போராட்டம் குறித்து பேரவையில் கேள்வி எழுப்புவோம்

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ மாணவர்கள் போராட்டம் குறித்து சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவார்கள் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

6 கேம் விளையாட செல்போன் கொடுக்காததால் விரக்தி - சிறுவன் எடுத்த விபரீத முடிவு!

தாம்பரம் அருகே கைப்பேசியில் விளையாடிக்கொண்டிருந்த 15 வயது சிறுவனைத் தந்தை திட்டி, அச்சிறுவனை உறவினர் வீட்டில் விட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுவன் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

7 சதுரங்க வேட்டை’யாடி வந்தவர்கள் கொத்தாகச் சிக்கியது எப்படி

பொள்ளாச்சி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் போலியான நவரத்தின கல்விற்க முயற்சி செய்த மோசடி கும்பலைக் காவல் துறையினர் கைது செய்தனர். அக்கும்பலைச் சேர்ந்த 22 பேர் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

8 விவசாயிகள் ஒன்றிணைந்தால் பெரும் லாபம் ஈட்டலாம் - உழவன் உற்பத்தியாளர் நிறுவனம்

ஈஷா சத்குருவின் வழிகாட்டுதலின்படி சிறந்த முறையில் தங்கள் நிறுவனம் முன்னேறி வருகிறது. விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்தால் அதிக லாபம் ஈட்டலாம் என வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

9 தமிழ்நாட்டில் 531 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 531 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

10 எங்களைப் போல பலர் பாஜகவில் இணைவார்கள்'- நமச்சிவாயம்

எங்களைப் போல பலர் பாஜகவில் இணைவார்கள் என அண்மையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details