தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 13, 2020, 7:52 PM IST

Updated : Mar 13, 2020, 9:04 PM IST

ETV Bharat / state

கொரோனா பீதி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

பள்ளிக் கல்வித் துறை
பள்ளிக் கல்வித் துறை

19:40 March 13

எல்.கே.ஜி., யு.கே.ஜி உட்பட ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டுவரும் 16 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை , விடுமுறை அளிக்கப்படுகிறது.

பள்ளிக்கல்வித் துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளிலும் எல்கேஜி, யூகேஜி, ப்ரீ கேஜி உட்பட வகுப்புகள் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், கேரள மாநிலத்தை ஒட்டி உள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி உட்பட ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, வரும் 16ஆம் தேதி முதல் 31ம் தேதி முறை விடுமுறை அளிக்க அரசால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்கொண்ட வகுப்புகளுக்கு 16ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது' என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

விலையில்லா முகமூடிகளை வழங்கும் தன்னார்வலர்கள்

Last Updated : Mar 13, 2020, 9:04 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details