தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 26, 2021, 5:06 PM IST

ETV Bharat / state

தீவிர நடவடிக்கையால் கட்டுக்குள் வந்த டெங்கு- தமிழ்நாடு அரசு அறிக்கை

தீவிர நடவடிக்கைகள் மூலமாக டெங்கு காய்ச்சல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

dengue fever
டெங்கு

சென்னை:தமிழ்நாட்டில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், சென்னையில் நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களால் டெங்கு பரவுகிறது. நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை26) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை தாக்கல் செய்தார்.

கட்டுக்குள் வந்த டெங்கு

அதில், டெங்கு பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருவதாகவும், டெங்கு மற்றும் கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் 2 ஆயிரத்து 715 தற்காலிக சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கபட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் 402 பேர் டெங்கு பாதிக்கப்பட்ட நிலையில், ஜூன் மாத பாதிப்பு 54 பேராக பதிவாகியுள்ளது. தொடர்ந்து, புகை போடுதல், கொசு ஓழிப்புக்கு மருந்து தெளிப்பு உள்ளிட்ட நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளபட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தடுப்பு நடவடிக்கை தீவிரம்

இதே போல் சென்னை மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில்,’கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் மொத்தம் 52 பேர் மட்டுமே டெங்கு நோயின் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம்’எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நான்கு வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: கரோனா களப்பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை

ABOUT THE AUTHOR

...view details